மூன்றாம் சுழி குறுக்கெழுத்துப் புதிர் © 2012
Couldn't confirm presence of Flash 7 or higher because JavaScript was disabled.
Flash Player 7க்குப் பிந்தைய மென்பொருள் தேவை; JavaScript இயங்க அனுமதி தேவை..
Flash இங்கே கிடைக்கும்
---
Flash நிறுவப்பட்டுள்ளதென்றால் தெரிவிக்கவும்.
பின்வருவது புதிரின் HTML வடிவம்
பதிவறிவு
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
இடமிருந்து
3. பதிவின் பெயர் வற்றியிருக்கலாம்.. சமூகக் கேடுகளைச் சாடும் இவர் கற்பனையும் எழுத்தும் வற்றா. தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்துக்கும் பதிவருக்கும் தொடர்புண்டு.
6. ஏறக்குறைய இதே பெயரில் வந்த கமலகாசன் படத்தில் 'ஆழக்கடலில் தோன்றிய முத்து' என்று ஒரு ரம்பமான பாடல் வரும். பொறியியல் நுட்பங்களை எளிமையான தமிழில் படம் போட்டு பாகம் வரைந்து விளக்கும் இவருடைய இடுகைகளைப் படித்ததும்... எல்லாமே உள்ளங்கை நெல்லிக்கனி.
9. பதிவுலக சங்கரவெள்ளத்தில் இவர் ஒரு துளி. ஆதித்துளி?
10. சமயபுரத்து ஆசிரியர் பதிவில் கொஞ்சம் சிகப்பு, கொஞ்சம் திகைப்பு, கொஞ்சம் மனிதம், கொஞ்சம் கொதிப்பு. இவரது 'யாரது ஆடிப் பெருக்கன்று நடுக்காவிரியில் ஊற்று தோண்டுவது?' வரிகளின் வலி இன்னும் குறையவில்லை.
12. நாத்திகர் அனைவரும் ஒரு நாள் ஆத்திகராவர் என்கிறார்கள், உண்மையா? மன்னன் பெயரைக் கொண்டப் பதிவுலக அசல் நாத்திகருடைய பதிவின் பெயரில் தெரியும்.
13. தமிழின் முதல் பதிவர்களுள் ஒருவரான இவரது மலரும் நினைவுகள் வாசகர்களிடையே பிரபலம். "எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும்" எனும் இவரது பதிவின் பொதுமொழியும்.
14. மீசைக்காரருக்கும் ஓசைக்காரருக்கும் இடையிலான பெரிய ஊர்க்காரர்? எல்லார் பதிவிலும் இவருடைய பின்னூட்டம் முதலில் வரும். பாதிப்பெயரில் விடையிருக்கும். செல்வமகன் நடையிருக்கும்.
18. 'வாசிப்பவரே சுவாசிப்பவர்' என்ற அறிமுகம் கொண்ட பதிவு ஐந்து லட்சம் பார்வைகளுக்கு மேல் பெற்றிருக்கிறது. கோவில், சமூகம் என்று எழுதும் இவருடைய பதிவின் படங்கள் சிறப்பம்சம்.
19. ஈரோடு ரத்தினத்தின் பதிவில் பெண் சாதனையாளர்கள் பற்றி அதிகம் படிக்கலாம்.
20. திருவிழாவில் புத்தகம் வெளியிடும் தமிழ்மணப் பதிமூன்று.
23. காவியத்தாயின் இளையமகன் பெயரில் ஒரு பதிவு. சுவாரசியமான இடுகைககளில் சில பொக்கிஷத் தன்மையன.
24. 'எமக்குத் தொழில் இழவுக்கட்டுரைகள் எழுதுவது என்று குறிக்கோளாயிருக்கிறார்' என்று ஜெமோ பற்றி எழுதினார்; சுஜாதாவை 'வலதுசாரி பார்ப்பனீய ஆணாதிக்க எழுத்தாளர்' என்றார். ஷாக் டாக் பதிவரிடம் சரக் டாக் இல்லாததால் வெளியில் மிதக்கவேண்டியிருக்கிறது.
26. பதிவின் கவிதைகள் புல்லரிக்கும். எல்லாம் இவர் தருவன - கண்ணதாசனும் கணியன் பூங்குன்றனாரும் தெரிந்தப் பதிவர்.
28. பிரபா ஒயின்ஷாப்புக்குச் சொந்தக்காரர். தத்துபித்துவம் தொலைத்த பெயர்.
29. ஐந்து பதிவுகள் எழுதும் காயல்பட்டின இஸ்லாமியத் 'தோழி'.
30. சமர்த்தனுக்கு எதிரியைப் படித்திருக்கலாம். வடமொழியும் மலையாளமும் அறிந்த மதுரைப் பேராசிரியர் பதிவில் கண்ணகி பற்றி அடிக்கடி வருவதில் வியப்புண்டோ?
மேலிருந்து
1. சரித்திரத்தில் சிற்றிடம் தேடும் சட்டம் தெரிந்தவரின் பதிவு. ஹாட். ஹாட். செம ஹாட். எதுக்குத் திரும்பணும்னேன்?
2. இரண்டெழுத்துக்காரரின் நாலெழுத்துப் பதிவில் கற்பனைச்சோலையும் உண்டு, இலக்கியமணமும் உண்டு.
4. நான்காரச் சக்கரபந்தம் என்றால் என்னவென்று தெரிந்து கொள்ள அறிவனின் பதிவைப் படிக்கவேண்டும்.
5. காதல்பா இந்தப்பக்கம் கந்தன்பா அந்தப்பக்கம். கவிச்சித்தனின் மறுபக்கம்.
7. சென்னைக் காதலரில் பாதி. மீதி திருவிழாத் தலைவர். திருமூலர் அறிஞர்.
8. சத்தியமா சொல்றேங்க.. இப்பத்தான் கவனிச்சேன். காதல் கவியரசி பதிவின் பெயரை இத்தனை வருஷமா 'வெளுத்த'னு படிச்சுட்டு வந்திருக்கேன்.. விடையில் வானத்தைக் காணோமே?
10. 'அன்னா ஹசாரே' பற்றி இப்பொழுது என்ன நினைக்கிறார் புத்தக அடுக்குப் படத்தோடு பின்னூட்ட அடையாளம் காட்டும் பதிவர்? 'முண்டாசு கவிஞன் மூச்சு, அங்கும்..இங்கும்..எங்கும்' என்று தன்னை அடையாளம் காட்டும் பதிவரின் வலைப்பூவில் அனேகப் பதிவுகள் தழலாகவே இருக்கின்றன.
11. தமிழ்ச்சினிமாப் பாடல்களின் தலை சிறந்தத் தொகுப்பு இவருடைய பதிவு. இந்தக் கிணற்றுத்தவளைக்கு உலகறிவு உண்டு.
13. வெறும் வார்த்தைகளுக்குச் சொல்லவில்லை, அருமையான சிறுகதைகள் எழுதுகிறார் வம்சிப் போட்டி வெற்றியாளர். இவர் இவராகவே எழுதும் பதிவு.
15. இவர் எழுதிய 'அயலான் வீட்டு மல்லிகை' எத்தனை பேருக்கு புரிந்ததோ? மிகவும் ரசித்த நுட்பமான கவிதை. என்ன சொல்லவந்தார் என்று எனக்குத் தெரியும் (ஹி). 'என் உயிரின் மூலம்' என்று சும்மாவா சொல்லுது சேலத்துக்காரர் பதிவு?
16. பலருடையப் பதிவுகளைப் படித்து நொந்தகுமாரனாக இருந்தவர் படிப்பதை விட்டு பெயரை மீட்டதாகச் சொல்கிறார்.
17. 'எண்ணங்களை எழுத்துக்களாக, கருத்தைக் கவர்ந்தவற்றை நிழற்படங்களாகக் கோர்த்தபடி' என்கிறது இவரது பதிவறிமுகம். அது சிரமமாக இருந்தால் ரூங்க்ராத்-எம்ஜிஆர் பாடல் வரி.
21. வினாயகப் பதிவரின் இன்னொரு பிள்ளை. திறந்தவெளியில் மின்னல் இல்லை.
22. பதிவுகளில் சென்னையைக் காதலித்துத் தள்ளுகிறார், இங்க்லிஷ் சென்னையை. பம்பாய் இவருடைய இரண்டாவது மெட்ராஸ்?
25. பதிவுப்பெயர் தான் அப்படி. 'இரண்டாம் வசந்தகாலத்தை அனுபவிக்கும்' பதிவர் சாதனை அரசியாக்கும். முப்பது இடமிருந்துப் பேராசிரியையின் மாணவியாச்சே... ?
27. தமிழின் இன்னொரு முதல் பதிவர். ஒன்று பூகம்பம் அல்லது எரிமலை வெடிக்கிறது இவர் ஊரில். அதனால் தானோ என்னவோ இவர் எழுத்து சாந்தமானது. ப்ருந்தாவின் தளம்.